தாம்பரத்திலிருந்து நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்கள் இயங்கும்: ரயில்வேத் துறை அறிவிப்பு..!

 

தாம்பரத்திலிருந்து நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்கள் இயங்கும்: ரயில்வேத் துறை அறிவிப்பு..!

வழக்கமாக நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்கள் சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.

வழக்கமாக நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்கள் சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும். இதில் சிறிது நாட்களுக்கு மட்டும் மாற்றம் ஏற்பட்டு  நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்கள் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. 

nellai express

மேலும், டிசம்பர் 7 ஆம் தேதி வரை சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களில் செல்ல முன்பதிவு செய்த பயணிகள், தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டதால் அதே டிக்கெட்டுகளை பயன்படுத்தி எழும்பூர் தாம்பரம் இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. 

Tambaram