தாமிரபரணி புஷ்கர விழா : நாளை மறுநாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்

 

தாமிரபரணி புஷ்கர விழா : நாளை மறுநாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்

தாமிரபரணி புஷ்கர விழா நாளை மறுநாள் நெல்லையில் தொடங்குகிறது இந்த புஷ்கர விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகின்றது.

தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா வருகிற 11-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நதியினை ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் குருபெயர்ச்சியின் பொழுது ஒவ்வொரு நதிகளை சிறப்பிப்பது வழக்கமாகும்.இந்தாண்டிற்கான  குரு பெயர்ச்சி கடந்த  4 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சியானார் . 

thamirabharanihj

விருச்சிக ராசிக்கு ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள நதி தாமிரபரணி நதியாகும். இதனை அடிப்படையாக கொண்டு தான் இந்த புஷ் கர விழா தாமிரபரணி ஆற்றில் நடைபெற உள்ளது.12 ராசிகளுக்கு ஏற்ப 12 நதிகளில் குருபெயர்ச்சியையொட்டி புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

அதில் தமிழகத்தில் 2 நதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மயிலாடுதுறை ஆற்றில் காவிரி புஷ்கர விழா விழா கொண்டாடப்பட்டது.அதை தொடர்ந்து இந்த ஆண்டு பொதிகை மலையில் உற்பத்தியாகி வங்க கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

mahapushkaram

இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் மகா புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் பு‌ஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.

பாபநாசத்தில் தாமிரபரணி பு‌ஷ்கர விழாவை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் திருப்புடைமருதூர், நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் நடைபெறும் பு‌ஷ்கர விழாக்களிலும் பங்கேற்கிறார். இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thamirabharani

இதற்கான ஏற்பாடுகளை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை நேற்று தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.