தாடி பாலாஜி மீது மனைவி நித்யா கொடுத்த புகார்: காவல் நிலையத்தில் விளக்கம் கொடுத்த பாலாஜி; என்ன சொன்னாரு தெரியுமா?

 

தாடி பாலாஜி மீது மனைவி நித்யா கொடுத்த புகார்:  காவல் நிலையத்தில் விளக்கம் கொடுத்த பாலாஜி; என்ன சொன்னாரு தெரியுமா?

மனைவி கொடுத்த புகார் தொடர்பாகக் காவல் நிலையத்தில் ஆஜராகி நடிகர் தாடி பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

சென்னை: மனைவி கொடுத்த புகார் தொடர்பாகக் காவல் நிலையத்தில் ஆஜராகி நடிகர் தாடி பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

நடிகர் தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது மகளுடன் தனியாக  வசித்து வந்தார். இதையடுத்து இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்காக பாலாஜி ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றும் நித்யா கண்டிஷன் போட்டார்.

balaji

இதையடுத்து சமீபத்தில் மாதவரம் காவல்நிலையம் வந்த நித்யா,  பாலாஜி தன்னையும், தனது மகளையும் மிரட்டுவதாகவும், குடித்துவிட்டு நண்பர்களுடன் வந்து கதவு, ஜன்னல்களை உடைத்து தொல்லை கொடுப்பதாகவும், செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்திருந்தார்.

balaji

இந்நிலையில்  நடிகர் பாலாஜி தனது வழக்கறிஞருடன் ஆஜராகி  விளக்கமளித்துள்ளார். அதில், ‘நான் எனது மனைவி நித்யாவை மிரட்டவில்லை. வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜனவரி மாதம் நான் சென்னையில் இல்லை. வெளியூரில் படப்பிடிப்பிலிருந்தேன். என் மீது மனைவி பொய் புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக என்னை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் மாதவரம் போலீஸ் நிலையம் வருகிறேன்’ என்று கூறியதோடு அதை  எழுத்துப்பூர்வமாகக் காவல்நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

முன்னதாக நித்யா, மருத்துவர் ஸ்வேதா ஷெட்டி என்பவர் தொடங்கியுள்ள தேசிய பெண்கள் கட்சியின் தமிழக தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.