தாடி பாலாஜி- நித்யா விவகாரத்தில் நீதிமன்றம் அறிவித்த அதிரடி தீர்ப்பு!

 

தாடி பாலாஜி- நித்யா விவகாரத்தில் நீதிமன்றம் அறிவித்த அதிரடி தீர்ப்பு!

தாடி பாலாஜி- நித்யா விஷயத்தில் திடீரென்று ஒரு புதிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளது.

சென்னை: தாடி பாலாஜி- நித்யா விஷயத்தில் திடீரென்று ஒரு புதிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதையடுத்து இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

thadi balaji

அதன் பின்னர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்காக பாலாஜி ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றும் நித்யா கண்டிஷன் போட்டார். எனினும் மீண்டும் இருவருக்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றது. 

thadi balaji

இந்நிலையில் பாலாஜி தனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். அந்த விசாரணையில் மகளை வாரத்தில் ஒரு முறை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து பேசிய தாடி பாலாஜி, ‘என் மகளின் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். என் பலமே என் மகள் போஷிகா தான். என் குழந்தையை வைத்து என்னை வீழ்த்த நினைக்கிறார் நித்யா. 

thadi balaji

இந்த வழக்கில் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. வாரம் ஒரு முறை என் தாய் வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை என் மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: ’அந்த மாதிரி ஒரு படம் எடுங்கன்னு சொன்னா அந்தப் படத்தையே எடுத்துட்டீங்களே பாஸ்’…ஒரு கடைக்குட்டி தேவராட்ட சிங்கம்…