தாடி பாலாஜியின் உண்மை குணத்தை போட்டு உடைத்த செய்தித் தொகுப்பாளர்!

 

தாடி பாலாஜியின் உண்மை குணத்தை போட்டு உடைத்த செய்தித் தொகுப்பாளர்!

தாடி பாலாஜியின் உண்மையான குணத்தை பிரபல செய்தித் தொகுப்பாளர் காயத்ரி கிஷோர் வெளியிட்டுள்ளார்

சென்னை: தாடி பாலாஜியின் உண்மையான குணத்தை பிரபல செய்தித் தொகுப்பாளர் காயத்ரி கிஷோர் வெளியிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்களில் காமெடி நட்சத்திரமாக வலம்வந்தவர் தாடி பாலாஜி.பின்பு திரைப்படங்களில் அதிக அளவு கவனம் செலுத்தாவிட்டாலும், பிரபல சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடுவராகவும், இருந்து வருகிறார். மேலும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2வில் பங்கேற்று தனது உண்மையான குணத்தின் மூலம் மக்கள்  வென்றார்.

இந்நிலையில் தாடி பாலாஜி பற்றி பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் காயத்ரி கிஷோர் கூறுகையில், “என்னுடைய சொந்த ஊருக்கு ஒரு முறை காரில் குடும்பத்துடன் சென்றோம். அப்போது  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள, ஒரு ஹோட்டலில் குடும்பத்தோடு சாப்பிட்டோம்.  பின் கார் டிரைவர் காரை ஸ்டார்ட் செய்த போது ஸ்டார்ட் ஆகவில்லை. அப்போது பக்கத்தில் இருந்த கார் ஓட்டுனரிடம் விசாரித்தோம்.

ஆனால் எங்களுக்கு அந்த காரில் தாடி பாலாஜி இருந்தது தெரியாது. பின்பு, காரில் இருந்து இறங்கிய பாலாஜி, ஏதாவது உதவி வேண்டுமா என எங்களிடம் கேட்டார். நாங்கள் எதுவும் வேண்டாம் என கூறியும், ஒரு சக மனிதராக என்ன பிரச்னை என மீண்டும் எங்களிடம் கேட்டு எங்களுக்கு உதவினார்” என்று தெரிவித்துள்ளர்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய குடும்பத்தோடு சேர அவர் எடுத்த முயற்சிகளும் நெகிழ்ச்சியானது என தெரிவித்துள்ள காயத்ரி கிஷோர், திரையில்தான் அப்படி நடிக்கிறாரோ என்று நான் கூட நினைத்தது உண்டு. ஆனால் பின்னர் தான் தெரிந்தது அவர் நிஜத்திலும் அப்படித் தான் என்று எனவும் கூறியுள்ளார்.