தாக்குதல் வேண்டாம்! – ஓ.பி.ஆர் வேண்டுகோள்

 

தாக்குதல் வேண்டாம்! – ஓ.பி.ஆர் வேண்டுகோள்

தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த அ.தி.மு.க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் சென்றார். அப்போது, கம்பம் பகுதியில் திரண்டிருந்த இஸ்லாமிய அமைப்பினர் ஒ.பி.ஆர்-க்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் காரை சுற்றிவளைத்துத் தாக்கவும் முயற்சி செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த அ.தி.மு.க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் சென்றார். அப்போது, கம்பம் பகுதியில் திரண்டிருந்த இஸ்லாமிய அமைப்பினர் ஒ.பி.ஆர்-க்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் காரை சுற்றிவளைத்துத் தாக்கவும் முயற்சி செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

opr

இந்த நிலையில், தாக்குதல் தொடர்பாக ஓ.பி.ஆர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “அமைதியான தேனி மாவட்டத்தில் அமைதியின்மை உருவாக்கி வன்முறையை தூண்டுவதற்காக சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முயற்சி செய்துள்ளனர். இதற்கும் உள்நோக்கத்துடன் கூடிய எதிர் மறையான பிரசாரத்திற்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய தவறான பிரச்சாரம் செய்வோரின் வலையில் மக்கள் விழுந்த விட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.