தள்ளிப்போனது அதர்வா- ஹன்சிகா திரைப்படம்! சோகத்தில் ரசிகர்கள்!

 

தள்ளிப்போனது அதர்வா- ஹன்சிகா திரைப்படம்! சோகத்தில் ரசிகர்கள்!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘100’ திரைப்படம் ரிலீசாக 3 நாட்களே உள்ள நிலையில், படத்தில் ரிலீஸ் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. 

சென்னை: நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘100’ திரைப்படம் ரிலீசாக 3 நாட்களே உள்ள நிலையில், படத்தில் ரிலீஸ் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. 

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் எழுதி இயக்கியுள்ள படம் மூன்றாவது படம் தான் 100. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். அவுரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் யோகிபாபு, ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

adharva

இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வருடம் ஜூலை மாதத்துடன் நிறைவு பெற்றது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அவசர தொலைபேசிகளைக் (எண் 100) கேட்டு, அவர்களுக்கு உதவும் காவலர்களைப் பற்றிய படம் தான் இது. அதனால் தான் படத்துக்கு ‘100’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். 

முன்னதாக ‘100’ திரைப்படம் மே.3ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இப்படம் வரும் மே.9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை கிராண்டாக ஒரு படமாக ரிலீஸ் செய்யும் நோக்கில் படத்தில் ரிலீஸ் தள்ளிப்போனதாக தயாரிப்புக் குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.மேலும் இத்திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இது போன்று தள்ளிப்போவது வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.