தளபதி 63 குறித்து மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்

 

தளபதி 63 குறித்து மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்

ஹாலிவுட்டில் இதுபோன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை என்று தளபதி 63 படம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான் பேசியுள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான் மனம் திறந்துள்ளார்.

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு,விவேக்,ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகச் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து விஜயின் இந்தப்படத்துக்கும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

arr

இது குறித்து பேசியுள்ள ஏ.ஆர் ரஹ்மான், ‘இந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹாலிவுட்டில் நான் இசையமைத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை. இயக்குநர் அட்லி, பீலே, லெகான் உள்ளிட்ட படங்களின் ரசிகர். அவரது இசை உணர்வு சிறப்பானது. நான் இசையமைத்த அனைத்து ஆல்பத்தையும் கேட்டிருக்கிறார். அதில் இருந்து இந்த மாதிரி பண்ணுங்களேன் சார், என்று கேட்பார். இது போல் கேட்கும் இயக்குநர்களை எனக்கு பிடிக்கும். இவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, ரசித்து செய்யும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப்பதை உணர முடியும். ஏதோ பாட்டு வாங்கிவிட்டோம் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், ஒவ்வொன்றையும் அட்லி ரசித்து ரசித்து செய்வார்’  என்றார்.