‘தல 59’: ஸ்ரீதேவிக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அஜித் படக்குழு!

 

‘தல 59’: ஸ்ரீதேவிக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அஜித் படக்குழு!

தல அஜித் நடிக்கும் ‘தல 59’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.

சென்னை: தல அஜித் நடிக்கும் ‘தல 59’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 59’ திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இவர் ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக விளங்குகிறார்.

thala59

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கப்பட்டன. மறைந்த நடிகையும், அஜித்திற்கு மிகவும் பிடித்த நடிகையுமான ஸ்ரீதேவியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து பூஜை தொடங்கப்பட்டது.

thala59

இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி அமைத்துள்ளார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்சி உள்ளிட்டோர் நடித்த ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ‘தல 59’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

thala59

‘தல 59’ ஷூட்டிங் அடுத்த 2 நாட்களுக்கு நடைபெறும், அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் முழுவீச்சில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தல அஜித்தின் பிறந்தநாளையொட்டி மே-1ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.