தல பேச்சை தட்டாமல் கேட்போம்; யுஸ்வேந்திர சாஹல் ஓபன் டாக் !!

 

தல பேச்சை தட்டாமல் கேட்போம்; யுஸ்வேந்திர சாஹல் ஓபன் டாக் !!

முன்னாள் கேப்டன் தோனி சொல்வதை அப்படியே பின்பற்றுவோம் என இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். 
இந்த மாதம் 30ம் தேதி துவங்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டுள்ளது. 

முன்னாள் கேப்டன் தோனி சொல்வதை அப்படியே பின்பற்றுவோம் என இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். 
இந்த மாதம் 30ம் தேதி துவங்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டுள்ளது. 

dhoni and chahal

முன்னாள் கேப்டனான தோனியின் கடைசி உலகக்கோப்பை இது  தான் என்பதால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும், இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வென்று அதனை தோனிக்கு சமர்பிக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தோனியின் பேச்சை தட்டாமல் கேட்போம் என இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சாஹல், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனி குறித்து பேசியதாவது; 
என்ன ஆனாலும் தோனி பாய் சொன்னால் அதை நாங்கள் அப்படியே கேட்போம். நாங்கள் தவறாக செல்லும்போது அவர் த் எங்களை வழி நடத்துவார்நாங்கள் சுயமாக ஏதேனும் திட்டம் தீட்டினால் அதை தோனியிடம் பகிர்ந்துகொள்வோம். . நாங்கள் அறிமுகமான முதல் போட்டியில் தோனியின் பேச்சை எப்படி கேட்டோமோ அது இன்றும் மாறவில்லை.” என்றார்.