தல-தளபதி ரசிகர்கள் பிரச்னையில் மூக்கை நுழைத்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்

 

தல-தளபதி ரசிகர்கள் பிரச்னையில் மூக்கை நுழைத்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்

விஜய்-அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதிவு வெளியிட்டுள்ளார். 

சென்னை: விஜய்-அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதிவு வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். என்ன தான் இவர்கள் நண்பர்களாகப் பழகி வந்தாலும் இவரது ரசிகர்கள் மற்றும் எலியும், புனையுமாகவே உள்ளனர். காரணம் இருக்கிறதோ, இல்லையோ அடிக்கடி இவரது ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக் கொள்கின்றனர். 

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ளது. அதனால் விஜய் ரசிகர்கள் #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்ற ஹாஷ் டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  

அதே போல் விஜய் ரசிகர்களைப் பழிவாங்கும் விதமாக அஜித் ரசிகர்கள் #RIPActorVijay என்ற ஹாஷ் டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் இது குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுகோளின் தாக்குதலிலிருந்து எங்கள் கிரகம் தப்பித்தது.  ஒழுங்கற்ற பருவமழை வெவ்வேறு நகரங்களைத் தாக்கியது. நம் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி மற்றும் கொடூரமான கிரிமினல் வழக்குகள் பற்றி பேசப்படுகின்றன, ஆனால் நமது அன்பான மாநில இளைஞர்கள் இதை ட்ரெண்ட் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.