தல அஜித்துக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா நயன்தாரா? 

 

தல அஜித்துக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா நயன்தாரா? 

விஸ்வாசம் படத்தின் பிரிவியூ பார்க்க மறுத்துவிட்ட நயன்தாரா, இன்று ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சென்னை: விஸ்வாசம் படத்தின் பிரிவியூ பார்க்க மறுத்துவிட்ட நயன்தாரா, இன்று ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.மேலும் தல தரிசனத்திற்காகச் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே அவரது ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர். தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் பிரிவியூவை ஏற்கனவே தனது மனைவி ஷாலினியுடன் சேர்ந்து அஜித் பார்த்தார். ஆனால் இயக்குநர் அழைப்பு விடுத்தும் பிரிவியூ பார்க்க நயன் மறுத்துவிட்டார்.காரணம் பட ரிலீசுக்குப் பின்னர் மக்களோடு படத்தைப் பார்க்க விரும்புவதாக அவர் கூறியதாகத் பேசப்பட்டுவருகிறது. 

அதன்படி, இன்று விஸ்வாசம் படம் ரிலீசாகியுள்ள நிலையில், சொன்ன வாக்கை நயன் காப்பாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், காதலருடன் புத்தாண்டு கொண்டாட வெளிநாடு சென்ற நயன் இன்னும் சென்னை திரும்பியது போல் தெரியவில்லை. இதனால் அவர் விஸ்வாசம் படத்தை வெளிநாட்டு ரசிகர்களோடு பார்க்கும் வாய்ப்புகள் தான் அதிகம். இல்லையெனில் அவர் சென்னை திரும்பியபின் இந்தப் படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம் எனத் தெரியவருகிறது.