தலைவலியை தாங்க முடியாமல் ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளை சாப்பிட்ட பெங்களூரு பெண் மரணம்

 

தலைவலியை தாங்க முடியாமல் ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளை சாப்பிட்ட பெங்களூரு பெண் மரணம்

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் தலைவலியை தாங்க முடியாமல் ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளை சாப்பிட்டதால் மரணம் அடைந்தார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முனேஷ்ப்பா. இவரது மனைவி அனுசுயம்மா. 45 வயதான அனுசுயம்மா நீண்ட காலமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் கடந்த 15 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகின்றபோதிலும் அனுசுயம்மாவுக்கு தலைவலி மட்டும் குறையவில்லை.

விக்டோரியா ஹாஸ்பிஸ்டல்

தலைவலிக்காக மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை அனுசுயம்மா நீண்டகாலமாக சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அவருக்கு தலைவலி கடுமையாக இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரையை ஒன்று சாப்பிடுவதற்கு பதிலாக ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளை சாப்பிட்டதாக தெரிகிறது.

அடுத்த சிறிது நேரத்தில் அனுசுயம்மா சுயநினைவு இல்லாமல் விழுந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகள் சோபா அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுசுயம்மாவை கொண்டு சென்றார். பின் அங்கிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த திங்ககட்கிழமையன்று அனுசுயம்மா மரணம் அடைந்தார்.

மாத்திரைகள்

அனுசுயம்மாவின் கணவா முனேஷ்ப்பா கொடுத்த புகாரின் அடிப்படையில், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு போலீசார் விசாரைணை நடத்தி வருகின்றனர்.