தலைவர் பதவிக்குக்கூட தகுதியில்லாதவர் ராகுல்காந்தி- தமிழிசை காட்டம்

 

தலைவர் பதவிக்குக்கூட தகுதியில்லாதவர் ராகுல்காந்தி- தமிழிசை காட்டம்

ராகுல்காந்தி 25 நாள் கும்பகரன தூக்கத்தில் இருந்தார் போல என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

ராகுல்காந்தி 25 நாள் கும்பகரன தூக்கத்தில் இருந்தார் போல என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ காஷ்மீர் விவகாரத்தில் 23 நாள் கழித்து தற்போது டிவிட் போட்டுள்ளார். காஷ்மீர் இந்தியாவுக்கு தான் சொந்தமானது. இந்தியாவே மோடியை பிரதமராக ஏற்றுக்கொண்ட நிலையில் ராகுலை தமிழகத்தின் வேட்பாளராக நிறுத்தி ஸ்டாலின் வரலாற்று பிழையை செய்துவிட்டார். கட்சி தலைவராக இருக்கக்கூட தகுதியற்றவர் ராகுல். 

tamilisai

ஜம்மு காஷ்மீர் 2 வது சுதந்திரம் அடைந்தது ஆகஸ்ட் 5-ல் தான். பாகிஸ்தான் சேனலில் ஸ்டாலின் பெயரை சொன்னது பெருமை என கட்சியினர் நினைத்துக்கொண்டுள்ளனர். இது காவல் நிலையத்தில் எனது போட்டோ வந்துவிட்டது என பெருமை கொள்வற்கு சமம். காஷ்மீரை தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரை மீட்பது தான் அடுத்த இலக்கு. மோடி ஆட்சியில் தவறு செய்தவர்கள், ஊழல் செய்தவர்கள் தப்ப முடியாது. பொருளாதாரத்தை நிமிர்த்தும் திறமை மத்திய அரசுக்கு உள்ளது.” என்று தெரிவித்தார்.