தலைவர்களின் சிலைகள் சிதைப்பது அறிவீனம்: நகைச்சுவை நடிகர் விவேக்
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக நகைச்சுவை நடிகர் விவேக் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு தொடர்பாக நகைச்சுவை நடிகர் விவேக் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினருக்கிடையே கலவரம் வெடித்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்து நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினார். உடனே அதற்குப் பதிலாக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இதில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
பெரும் தலைவர்களின் சிலைகள் அவர்கள் தந்த தத்துவத்தின், சேவையின் வடிவங்கள்.அதை சிதைப்பது அறிவீனம்.ஊர் தூற்றும். இளையோர், மரம் நடுதல் குளம் ஏரி தூர்வாருதல் ஏழை மாணவர் கல்விக்கு உதவுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் ஊர் போற்றும். அன்பு பரப்புவோம்; உலகை அன்பால் நிரப்புவோம்.
— Vivekh actor (@Actor_Vivek) August 27, 2019
அதில், ‘பெரும் தலைவர்களின் சிலைகள் அவர்கள் தந்த தத்துவத்தின், சேவையின் வடிவங்கள்.அதை சிதைப்பது அறிவீனம்.ஊர் தூற்றும். இளையோர், மரம் நடுதல் குளம் ஏரி தூர்வாருதல் ஏழை மாணவர் கல்விக்கு உதவுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் ஊர் போற்றும். அன்பு பரப்புவோம்; உலகை அன்பால் நிரப்புவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.