தலைமை செயலகத்தில் துணை முதல்வர் யாகம் நடத்தினாரா? ஜெயக்குமார் விளக்கம்

 

தலைமை செயலகத்தில் துணை முதல்வர் யாகம் நடத்தினாரா? ஜெயக்குமார் விளக்கம்

தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் யாகம் நடத்தினாரா? என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் யாகம் நடத்தினாரா? என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் இல்ல திருமணவிழாவில் பேசுகையில், தலைமை செயலகத்தில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில், இன்று அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளது. கொடநாடு விவகாரத்தில் முதல்வர் கொலைக் குற்றவாளியாக சிறைக்கு செல்லவிருக்கிறார். அதனால்தான் மீண்டும் முதல்வர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என பன்னீர் செல்வம் யாகம் வளர்த்திருக்கிறார் என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தலைமைச்செயலகத்தில் ஓ.பி.எஸ் யாகம் நடத்தியதை யார் பார்த்தது? மு.க.ஸ்டாலின் ஆதாரமில்லாத புகார் கூறுகிறார். அதிமுக ஒற்றுமையை சீர்குலைக்க ஸ்டாலினும், தினகரனும் சூழ்ச்சி செய்கிறார்கள் என்றார்.