தலைமுடி வளர்ச்சி, உதிர்வுக்கு ஒரே தீர்வு!

 

தலைமுடி வளர்ச்சி, உதிர்வுக்கு ஒரே தீர்வு!

ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் தலைமுடியில் அக்கறை காட்டுகிறார்கள். தலைமுடி உதிர்தல், வழுக்கை விழுதல் பெரும் பிரச்னையாக கருதப்படுகிறது.

ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் தலைமுடியில் அக்கறை காட்டுகிறார்கள். தலைமுடி உதிர்தல், வழுக்கை விழுதல் பெரும் பிரச்னையாக கருதப்படுகிறது.

குறிப்பிட்ட அளவிற்கு முடி உதிருந்து மீண்டும் வளர்ந்தால் பிரச்னை இல்லை. ஆனால், அதுவே அதிகளவில் உதிர்ந்து மீண்டும் வளராமல் போனால் தான் பிரச்னை. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் முடி உதிர்ந்து வழுக்கை விழுந்து வந்தது. ஆனால், தற்போது இளம் தலைமுறையினர் பெரிதளவும் பாதிக்கப்படுகிறார்கள்.

hairfall

நெல்லிக்காய்ச் (பெரிது) சாறு கால் லிட்டர், மஞ்சள் சரிசாலைச் சாறு கால் லிட்டர், வெந்தயம் ஐந்து கிராம், வெந்தயத்தை அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் நன்கு காய்ச்சி தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

தேங்காய்ப் பால் ஒரு லிட்டர், சீரகம் இருபது கிராம், தேங்காய் எண்ணெய் நூறு மி.லி., நன்னாரி வேர்ப்பொடி பத்து கிராம், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நல்ல பலன் கிடைக்கும்.

hairgrowth

முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும். நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.