தலைமறைவான நாட்களில் முகிலன் எங்கிருந்தார் ?: மதுரை நீதிமன்றம் கேள்வி

 

தலைமறைவான நாட்களில் முகிலன் எங்கிருந்தார் ?: மதுரை நீதிமன்றம் கேள்வி

தலைமறைவான முகிலன், திருப்பதியில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்து முகிலன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முகிலன் சென்னையில் கொடுத்த பேட்டிக்குப் பிறகு அவரை காணவில்லை. முகிலன் காணாமல் போன வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. முகிலன் மீது பாலியல் தொந்தரவு செய்ததாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான முகிலன், திருப்பதியில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். 

Mugilan

சிறையில் இருக்கும் முகிலன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ஏன் இத்தனை நாட்கள் தலைமறைவாக இருந்தீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு முகிலன், யாரோ தன்னை கடத்தி சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். காணாமல் போன நாட்களில் எங்கே இருந்தீர்கள் என்பது குறித்து விளக்கமாகத் தெரிவித்தால், ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று  கூறி  தீர்ப்பளித்துள்ளார். மேலும், இந்த வழக்கை வரும் நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.