தலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்!

 

தலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்!

சென்னை : தந்தை, மகனை கத்தியால் குத்திய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் நாட்டான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருள், தமிழரசன் மற்றும் மனோஜ். இந்த மூன்று பேரும் கஞ்சா போதைக்கு அடிமையானதும் குடித்து விட்டு அப்பகுதியில் வசிப்பவர்களுடன் வீண் தகராறு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் வாட்டர் கேன்  சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு  முற்றவே ஆத்திரமடைந்த அருள், தமிழரசன் இருவரும் மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளனர். இதைக்கண்ட அவரது தந்தை குமார் அவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். அவரையும் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

பின்னர்  படுகாயமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது தந்தை குமார் இருவரையும் அப்பகுதியில் வசிப்போர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக்கு வந்திருந்த மனோஜை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.