தலைகீழாக விழுந்த எஸ்.ஜே.சூர்யா பட நாயகி! நடன நிகழ்ச்சியில் நடந்த பரிதாபம்!

 

தலைகீழாக விழுந்த எஸ்.ஜே.சூர்யா பட நாயகி! நடன நிகழ்ச்சியில் நடந்த பரிதாபம்!

தமிழில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான கள்வனின் காதலி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்  ஷ்ரத்தா ஆர்யா. அதைத்தொடர்ந்து வந்தே மாதரம் உட்பட சில படங்களில்  நடித்துள்ளார். பின்பு தமிழில் வாய்ப்பு சரியாக கிடைக்காததால் இந்தி, தெலுங்கு, கன்னடப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

தலைகீழாக விழுந்த எஸ்.ஜே.சூர்யா பட நாயகி! நடன நிகழ்ச்சியில் நடந்த பரிதாபம்!

இவர் தற்போது நாச் பலியே என்ற நடன ரியாலிட்டி ஷோவின் 9 வது சீசன்னில் பங்கேற்று வருகிறார். அப்போது மேடையில் தனது ஆண் நண்பர் ஆலம் மக்காருடன் ஆடிக்கொண்டே இருக்கும் பொது சமயத்தில் ஆலம் அவரைத் தலைகீழாகத் தூக்கி வைத்திருக்க வேண்டும்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஆலமின் கை நழுவியதில் ஸ்ரத்தா கீழே விழுந்தார் . இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது மட்டுமின்றி  கழுத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தற்போது இது குறித்து அவர் கூறுகையில், ‘ எனக்கு பலத்த காயம் ஏதுமில்லை என்றாலும் பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறேன். ஆலம், கை வழுவியதால் கீழே விழுந்துவிட்டேன். பயிற்சியின் போது சரியாக ஆடினோம். நடுவர்கள் முன்னால் தடுமாறிவிட்டோம். இருந்தாலும் சிறப்பாக ஆடியிருக்கிறோம். யாரும் கவலைப் பட தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.