தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிட போறீங்களா… இதை படிச்சிட்டு போங்க..!

 

தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிட போறீங்களா… இதை படிச்சிட்டு போங்க..!

தலப்பாக்கட்டு பிரியாணி ஹோட்டல் இல்லாத ஊரே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுக்க கொடிகட்டிப் பறக்கிறது அந்த உணவகம்.எல்லா இடங்களில் அதற்கு ஏகத்துக்கும் வரவேற்பு உண்டாக காரணம்-அதன் சுவை,ஊழியர்கள் கவனித்துக்கொள்ளும் விதம் இரண்டும்தான்!

தலப்பாக்கட்டு பிரியாணி ஹோட்டல் இல்லாத ஊரே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுக்க கொடிகட்டிப் பறக்கிறது அந்த உணவகம்.எல்லா இடங்களில் அதற்கு ஏகத்துக்கும் வரவேற்பு உண்டாக காரணம்-அதன் சுவை,ஊழியர்கள் கவனித்துக்கொள்ளும் விதம் இரண்டும்தான்!

thalapakatu briyani

இந்த இரண்டிலும் தாங்களாகவே மண்ணள்ளிப் போட்டுக்கொண்ட சம்பவம் கரூரில் நடந்திருக்கிறது. பஸ் ஸ்டான்ட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தலப்பாக்கட்டில் எப்போதும் கூட்டத்துக்கு குறைவில்லை.எல்லோரும் சாப்பிடுவதில் கவனமாக இருந்த நேரத்தில் ஒரு இளைஞனின் அதிர்ச்சிக் குரல் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!

band aid

அந்த இளைஞனுக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் ரத்தக்கறை படிந்த பேண்டெய்ட் கிடந்திருக்கிறது.இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞன் அது குறித்து அங்கிருந்த நிர்வாகியிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.அதற்கு ஏடாகூட்டமாகப் பதில் சொல்லியிருக்கிறார்.மிரட்டுகிற தொனியில் அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்ததும் சாப்பிட்டுக்கொண்டிருந்த அத்தனை பேரும் எதிர்ப்பு தெரிவித்து,சாப்பாட்டை முழுவதும் சாப்பிடாமல் கடையின் முன் திரளாக கூடியிருக்கிறார்கள்.

band aid

உடனடியாக அங்கு வந்த கரூர் காவல் துறையினர் இது பற்றி விசாரித்திருக்கிறார்கள்.கூடவே உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார ஆய்வாளரிடமும்  புகார் அளித்தனர்.பேண்டெய்ட் இருந்த பிரியாணியை அதிகாரிகளிடம் காட்டியுள்ளனர். அதனை சோதனைக்கு எடுத்துக் கொண்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். 

கஸ்டமரை மிரட்டிய நிர்வாகியிடம் ஒரு பேருக்குக்கூட  விசாரணை நடக்கவில்லை என்பதால் கஸ்டமர்கள் அதிர்ச்சி.