தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நாடகம் ஆடிய பெண்: வித்தியாசமான தீர்ப்பு கொடுத்த நீதிபதி!

 

தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நாடகம் ஆடிய பெண்: வித்தியாசமான தீர்ப்பு கொடுத்த நீதிபதி!

விஷம் குடித்து தற்கொலை செய்வதாக நாடகமாடி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் விசித்திரமான தீர்ப்பை வழங்கியது. 

காரைக்குடி: விஷம் குடித்து தற்கொலை செய்வதாக நாடகமாடி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் விசித்திரமான தீர்ப்பை வழங்கியது. 

suicide

காரைக்குடியைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுக்கு அவரது அலுவலகத்தில் பாலியல் தொந்தரவு இருந்துள்ளது. இது கணவருக்கு தெரியவர கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திகா தான்  தற்கொலை செய்வதாகக் கூறி விஷம் அருந்தும் வீடியோ காட்சியை வெளியிட்டார். இதனைக் கண்ட காரைக்குடி  எஸ்.ஐ. தினேஷ் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அந்த பெண்  சோப் ஆயில் குடித்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. 

suicide

இந்த விவகாரம் காரைக்குடி குற்றவியல் நீதித்துறை  நீதிபதி பாலமுருகன் கவனத்திற்குச் சென்ற நிலையில் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் மற்றும் கார்த்திகாவிடம் விசாரணை நடத்திய நீதிபதி , ஒருமாத காலத்திற்கு  அரசு மருத்துவமனைக்குத் தினமும் சென்று தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுவோருக்கு உயிரின் மதிப்பை விளக்க வேண்டும்’  என்று வித்தியாசமான தீர்ப்பை அளித்தார்.