தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு?!

 

தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி:  விசாரணையில் கதையே மாறி போச்சு?!

கள்ளக்காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம்: கள்ளக்காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தை சேர்ந்த கோபிநாத் –  ராஜேஸ்வரி இருவரும் விழுப்புரத்தில் கணவன் மனைவி என்று கூறி கொண்டு வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். இதையடுத்து இருவரும் கடந்த  23 ஆம் தேதி இருவரும் வெளியே சென்றுவிட்டு வீடு திருப்பியுள்ளனர். இதை தொடர்ந்து நேற்று காலை வெகுநேரமாகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, இருவரும் வாயில் நுரை தள்ளியபடி படுக்கையில் கிடந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

suicide

இதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் ‘நானும், ராஜேஸ்வரியும் சேர்ந்து வாழ்வது எனது தாய்க்கும், உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை’ என எழுதப்பட்டிருந்தது.

illegAL

இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட, வாடகை வீட்டின் உரிமையாளரிடம் கோபிநாத் கொடுத்த முகவரிக்கு விரைந்தனர். அதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது. அதில் கோபிநாத்தை காணவில்லை என்று அவரது மனைவி உமாவும் , ராஜேஸ்வரியை காணவில்லை என்று அவரது கணவர் முல்லைவேந்தனும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதாவது இறந்து போன கோபிநாத் – ராஜேஸ்வரி இருவரும் கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்தது. 

SUICIDE

வேலை காரணமாக முல்லை வேந்தன் வீட்டுக்கு வந்த கோபிநாத்துடன் ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற இரு வீட்டாரும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், வாடகைக்கு வீடெடுத்து தங்கியதோடு, தற்கொலையும் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் வாசிக்க: சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்!