தற்காப்புக்கு துப்பாக்கி வேணும் !ஸ்ரீ ரெட்டியின் அடுத்த அட்ராஸிட்டி!

 

தற்காப்புக்கு துப்பாக்கி வேணும் !ஸ்ரீ ரெட்டியின் அடுத்த அட்ராஸிட்டி!

நடிகை ஸ்ரீரெட்டி தாக்கப்பட்ட வழக்கில், வீடியோ ஆதாரம் மற்றும்  பைனான்சியர் சுப்ரமணியத்துடன் பேசிய ஆடியோ ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி தாக்கப்பட்ட வழக்கில், வீடியோ ஆதாரம் மற்றும்  பைனான்சியர் சுப்ரமணியத்துடன் பேசிய ஆடியோ ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

பாலியல் புகார்

reddy

சினிமாத்துறையில் பலர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் தற்போது ரெட்டி டைரி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வியாழன் இரவு சென்னை வளசரவாக்கத்தில் தன்னுடைய வீட்டில் இருந்த போது பைனான்சியர் சுப்ரமணி தாக்குதல் நடத்தியதாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.மேலும்  இந்த தாக்குதலில் தனது வீட்டில் இருந்த கண்ணாடி சேதமானதுடன் தனது ஆடைகளை பிடித்து இழுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பைனான்சியரை வீட்டுக்கு அழைத்த ஸ்ரீரெட்டி

subramani

ஆனால்  இது குறித்த விசாரணையில், ஸ்ரீரெட்டிதான் சுப்ரமணியை தனது வீட்டுக்கு அழைத்ததாகவும், அங்கு சுப்ரமணிக்கு மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, ஸ்ரீரெட்டி பழச்சாறு குடித்தும். பின்னர் இந்த நாடகத்தை ஸ்ரீரெட்டி நடத்தியுள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

கைகலப்பு 

srireddy

ஆனால்  போலீசாரின் இந்த தகவலை முற்றிலும் மறுத்த ஸ்ரீரெட்டி, தன்னுடைய வீட்டில் இருந்த சிசிடிவி காட்சி மற்றும் பைனான்சியர் சுப்ரமணியத்துடன் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ரெட்டி டைரி தொடர்பாக, பேச  பைனான்சியர் சுப்ரமணியத்தை  வீட்டிற்கு அழைத்த ஸ்ரீரெட்டி அவர் இரவு 10 மணிக்கு மேல் வந்ததால், நாளை  காலை பேசலாம் என்று கூறிஅவரை அனுப்ப முயன்றுள்ளார். ஆனால்  பைனான்சியர் சுப்ரமணியத்தை  அடுத்து ஒருவர் ஒருவராக சிலர் ஸ்ரீரெட்டி வீட்டிற்கு வர, சந்தேகமடைந்த அவர் தனது மேனேஜர் மூலம் அவர்களை தடுத்து நிறுத்த  அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால், அங்கு கைகலப்பு ஏற்பட்டு, இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றுள்ளது. 

ஆதாரத்தை வெளியிட்ட  ஸ்ரீரெட்டி

srireddy

ஆனால்  போலீஸ் தரப்போ, ஸ்ரீரெட்டி கொடுத்த வழக்கை, வாபஸ் வாங்க சொல்லி வற்புறுத்த வேறு வழியின்றி வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த அவர், தனக்கு எதிரிகள் அதிகம் இருப்பதால், துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி வழங்குமாறும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தன்னிடம் உள்ள ஆதாரங்களை கொண்டு மனித உரிமை ஆணையத்தை நாடுவேன் என்றும் கூறியுள்ள அவர், நயன்தாரா குறித்த ராதாரவியின் சர்ச்சை கருத்துக்கு தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

 

இதையும் வாசிக்க: கேப்டனுக்கு பிடிச்ச எம்.ஜி.ஆர் பாட்டு! இது கேப்டனுக்கு தெரியுமா !?