தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்த கம்பெனி வேன் : பரிதாபமாக உயிரிழந்த ஊழியர் !

 

தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்த கம்பெனி வேன் : பரிதாபமாக உயிரிழந்த ஊழியர் !

அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவரும் கம்பெனி  வேன் மூலமாகத் தான் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்களாம்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள அமரம்பேடு பகுதியில் தனியார் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவரும் கம்பெனி  வேன் மூலமாகத் தான் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்களாம். இந்த கம்பெனியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு சக ஊழியர்களுடன் வேனில் சென்று கொண்டிருந்துள்ளார். 

ttn

அந்த வேன் குன்றத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியுள்ளது. அதனை டிரைவர் கட்டுப்படுத்த முயற்சித்தும் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. வேகமாக ஓடிய வந்த வேன்,  சாலையில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வேனில் இருந்த தாமோதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், வேனில் இருந்த 5 ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தாமோதரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.