தர்மயுத்ததின் துவக்கம், மகனின் அரசியல் பிரவேசம்: ஓபிஎஸ் கருத்து இதுதான்?

 

தர்மயுத்ததின் துவக்கம், மகனின் அரசியல் பிரவேசம்: ஓபிஎஸ் கருத்து இதுதான்?

தர்மயுத்தம் மற்றும் மகனின் அரசியல் பிரவேசம் பற்றி தன் கருத்தை பதிவு செய்துள்ளார் ஓபிஎஸ்.

சென்னை: தர்மயுத்தம் மற்றும் மகனின் அரசியல் பிரவேசம் பற்றி தன் கருத்தை பதிவு செய்துள்ளார் ஓபிஎஸ்.

அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்தும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். குடும்ப அரசியல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அதிமுகவை சேர்ந்த அடிப்படை உறுப்பினர் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமையுள்ளது. அதன் அடிப்படையில்தான் என் மகனும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் என கூறினார்.

தகுதியும் திறமையும் உள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மாண்புமிகு அம்மா அவர்களால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் குடும்பம், கட்சியையும் ஆட்சியையும் நாசம் செய்யும் நிலைமை ஏற்பட்டபோதுதான் தர்மயுத்தத்தை துவங்கினேன் என ஓபிஎஸ் தெரிவித்தார்.