தர்பார் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கேட்டு மிரட்டல்: ஏ.ஆர். முருகதாஸ் பாதுகாப்புகோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

 

தர்பார் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கேட்டு மிரட்டல்:  ஏ.ஆர். முருகதாஸ் பாதுகாப்புகோரி  உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் பெற்ற  நிலையிலும் வசூலை வாரிக்குவித்துள்ளது. 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக தமிழகத்தில் கடந்த மாதம் வெளியானது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் பெற்ற  நிலையிலும் வசூலை வாரிக்குவித்துள்ளது. 

 

இதன் பின்னர்  ரஜினியின் தர்பார் படம் தமிழகத்தில்  எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை அதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறியதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்க ரஜினி மற்றும் இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸை சந்திக்க முயற்சி செய்தனர். அப்போது ஏ.ஆர். முருகதாஸ் காவல்துறையை வைத்து மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ttn

இந்நிலையில் தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி காவல்துறையினரின் பாதுகாப்பு கேட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.