தர்பார் படத்திலிருந்து சசிகலா குறித்த சர்ச்சை வசனத்தை நீக்க தயார் – லைகா நிறுவனம்

 

தர்பார் படத்திலிருந்து சசிகலா குறித்த சர்ச்சை வசனத்தை நீக்க தயார் – லைகா நிறுவனம்

தர்பார் படத்தில் சசிகலா தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கத் தயார் என லைகா பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

தர்பார் படத்தில் சசிகலா தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கத் தயார் என லைகா பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் இன்று வெளியாகி உள்ளது. படத்தில் அரசியல் இருக்காது என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்த நிலையில் சசிகலாவை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் ரஜினிகாந்த் சிறைக்குள் நடந்து சென்றுகொண்டிருப்பார். அப்போது, கைதி ஒருவர் சிறையில் செல்போனில் பேசிக்கொண்டிருப்பார். இதைப் பார்த்த உயரதிகாரியான ரஜினி, வார்டனிடம் ஜெயிலில் செல்போன் எல்லாம் உண்டு போல என்று சொல்வார். அதற்கு வார்டன், காசு இருந்தால் போதும் சார், ஷாப்பிங்கே சென்று வரலாம் என்பார்.

darbar

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றுவந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது. அதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்த காட்சி இருந்தது. இந்த குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குநர்  முருகதாஸ் மீது வழக்கு தொடுக்கப்படும் என சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

 

 

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லைகா நிறுவனம், “எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதி சிறைச்சலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்ல யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்தால், அது படத்திலிருந்து நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம் “ என குறிப்பிட்டுள்ளது.