தர்பார் படத்தின் ஓப்பனிங் பாட்டு இப்படி தான் இருக்கும்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தகவல்!

 

தர்பார் படத்தின் ஓப்பனிங் பாட்டு இப்படி தான் இருக்கும்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தகவல்!

தர்பார் படத்தின் ஓப்பனிங் குறித்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். 

சென்னை: தர்பார் படத்தின் ஓப்பனிங் குறித்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க. தளபதி படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்துள்ளார். மும்பையில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் ஓப்பனிங் பாட்டை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். 

இந்த நிலையில் மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.பி.பியிடம் தர்பார் படம் குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது, ‘ தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நேர்மையான போலிஸ் அதிகாரியாக வருகிறார். அவருக்கு ஒரு பாராட்டு விழா நடக்கிறது. அந்த விழாவில் ரஜினி, நான் என் வேலையை மட்டும் தான் செய்தேன், இந்தச் சட்டையை கழட்டினால், நான் உங்களில் ஒருவன் என கூறி பாட்டு பாட ஆரம்பிப்பார்’ என்று படத்தின் ரகசியத்தை உடைத்துள்ளார். 

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  படங்களில் பெரும்பாலான ஓபனிங் பாடல்களைப் பாடியவர் எஸ்பி பாலசுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.