தர்பார் படத்தால் ஏற்பட்ட நஷ்டம்…ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள்!?
சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும் வசூலை வாரிக்குவித்துள்ளது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக தமிழகத்தில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வெளியானது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும் வசூலை வாரிக்குவித்துள்ளது.
இந்நிலையில் ரஜினியின் தர்பார் படம் தமிழகத்தில் எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை அதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து விநியோகஸ்தர்கள் இன்று மதியம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஒன்று கூடி ரஜினியிடம் முறையிட போவதாக தகவல் வந்துள்ளது.
முன்னதாக தர்பார் வெளியான 4 நாட்களில் ரூ.150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.