தர்பார் படத்தால் அனிருத்துக்கு சிக்கல்!

 

தர்பார் படத்தால் அனிருத்துக்கு சிக்கல்!

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்திற்கான புரோமோஷன் தமிழகம் மட்டுமின்றி மும்பையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

aniruth

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத், தர்பார் படத்தின் இசை பணிகளில், வாக்குறுதியை மீறி விட்டதாக தமிழக இசை கலைஞர்கள் சங்க தலைவர் தீனா பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். மேலுலும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் அனிரூத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்துள்ளார். 

பேட்ட திரைப்படத்தின்போது இசையமைப்பாளர் அனிருத், தமிழக திரைப்பட இசைக் கலைஞர்களை புறக்கணித்ததாக புகார் எழுந்தது. அதனை ஒப்புக்கொண்ட அனிரூத், தனது தவறை திருத்தி கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தர்பார் படத்தில் தமிழக இசைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு,  ஹாலிவுட் கலைஞர்களை வைத்து இசை அமைத்திருக்கிறார் அனிரூத். இதனால் மீண்டும் சிக்கல் கிளம்பியுள்ளது. தமிழக கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற வாக்குறுதியை அனிரூத் மீறி விட்டதாக தற்போது தீனா புகார் அளித்துள்ளார்.