தர்பார் அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் பறந்த ரஜினி- நயன்தாரா
Aug 17, 2019, 17:52 IST1566044566000
முதல் முறையாக ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தர்பார்.
முதல் முறையாக ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தர்பார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் ஷூட்டிங் காணாத மழை காரணமாக தடைப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பைப் படக்குழு ஜெய்ப்பூரில் தொடர முடிவு செய்துள்ளனர். வரும் திங்கள் முதல் ஜெய்ப்பூரில் தொடங்கவுள்ள படப்பிடிப்புக்கு இன்றே ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் படக்குழுவினர் விமானம் மூலம் ஜெய்ப்பூர் சென்றுள்ளனர்.
ரஜினியும், நயன்தாராவும் அருகருகே விமானத்தில் அமர்ந்து பயணம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.