தருமபுரி மாணவி வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

 

தருமபுரி மாணவி வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

தருமபுரியில் பள்ளி மாணவியை வன்கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: தருமபுரியில் பள்ளி மாணவியை வன்கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் மலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை, ரமேஷ், சதீஷ் என்ற இரண்டு காமுகர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“தருமபுரி மாவட்டம், சிட்லிங் மலைக்கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், கடந்தவாரம் சேலம் மாவட்டத்திலும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்படிருப்பதையும் தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்று தொடர்ந்து இந்த சம்பவம்கள் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உச்சதண்டனையான தூக்குதண்டனை கொடுத்தால் தான், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் தடுக்கமுடியும். எனவே ஆட்சியாளர்களும், நீதித்துறையினரும் இதை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.