தருமபுரியில் பிரஷர் குக்கர் வெடித்து பள்ளி மாணவிகள் காயம் – போலீசார் விசாரணை

 

தருமபுரியில் பிரஷர் குக்கர் வெடித்து பள்ளி மாணவிகள் காயம் – போலீசார் விசாரணை

தருமபுரியில் ஒரு ஹோட்டலில் பிரஷர் குக்கர் வெடித்து சிதறியதில் பள்ளி மாணவிகள் காயம் அடைந்தனர்.

தருமபுரி: தருமபுரியில் ஒரு ஹோட்டலில் பிரஷர் குக்கர் வெடித்து சிதறியதில் பள்ளி மாணவிகள் காயம் அடைந்தனர்.

தருமபுரி பேருந்து நிலையம் அருகே பென்னாகரம் மெயின் ரோடு இந்தியன் வங்கியின் அருகே ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹோட்டல் இன்று காலை வழக்கம் போல் இயங்கு வந்தது. அப்போது கடையின் வெளியே வைத்திருந்த கியாஸ் அடுப்பில் கறியை பிரஷர் குக்கரில் வேக வைத்தனர். நீண்டநேரமாக குக்கரில் இருந்து வந்த விசிலை ஹோட்டல் ஊழியர்கள் கவனிக்காமல் வேலை பார்த்து வந்தனர். இதனால் அந்த குக்கர் பிரஷர் தாங்காமல் திடீரென வெடித்துச் சிதறியது. அப்போது அந்த வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவிகள் மீது குக்கரில் இருந்த சுடுநீர் சிதறியது.

ttn

அந்த நீர் நல்ல கொதிநிலையுடன் இருந்ததால் மாணவிகள் வலியால் அலறினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவிகளை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தில் மாணவிகளுக்கு கை, கால், முகம் உள்ளிட இடங்களில் லேசான காயம் ஏற்பட்டது. குக்கரில் விசில் அடிக்கும்போது கியாஸ் அடுப்பை அணைக்காததால் இந்த சம்பவம் நடந்ததாக அந்த பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட ஹோட்டல் ஊழியர்களுடன் பொதுமக்களில் சிலர் வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.