தருமபுரியிலும் கொரோனா : தமிழகத்திலேயே பாதிப்பில்லாத மாவட்டம் எது தெரியுமா?
தமிழகத்தின் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அதை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் நேற்று தருமபுரியில் 35 வயது ஓட்டுநனர் கொரோனா உறுதியானது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் இதன் மூலம் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.