தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணம்…பக்தர்கள் அதிர்ச்சி!

 

தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணம்…பக்தர்கள் அதிர்ச்சி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண் சன்னதியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண் சன்னதியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை வில்லாபுரம் கற்பகம் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி. 62 வயது மதிக்கத்தக்க மகேஸ்வரி, மீனாட்சியம்மனை வணங்க இன்று காலை கோவிலுக்கு வந்துள்ளார். கொடிமரம் அருகே வந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். மருத்துவர்கள் வருவதற்குள் அவரது உயிர் பிரிந்தது. அம்மன் சன்னதி அருகே மகேஸ்வரி இறந்ததால் இன்று மீனாட்சியம்மன் கோவிலில் நடக்கவிருந்த திருமணங்கள் கோவில் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டன. 

கோவிலில் சிறப்பு பூஜைகள் பரிகாரங்களுக்கு பிறகே திருமணங்கள் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கோவிலில் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டது.  கோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை முடிந்தவுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.