தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன் – எடியூரப்பா உறுதி! 

 

தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன் – எடியூரப்பா உறுதி! 

எக்காரணத்தைக் கொண்டும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன் என கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா உறுதியளித்துள்ளார். 

எக்காரணத்தைக் கொண்டும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன் என கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா உறுதியளித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய குமாரசாமி, பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து பாஜகவை சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக இன்று மாலை நான்காவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிபிரமாணம் செய்துவைத்தார். 

முதலமைச்சராக பதவியேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா,  இன்னும் 5 மாதத்தில் எனது தலைமையிலான அரசு, மற்றும் முந்தைய அரசின் சாதனைகள் என்ன என்பது குறித்து காட்ட வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. அதனால் எக்காரணத்தை கொண்டும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன். கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பேன் என உறுதியளித்துள்ளார்.