‘தயாளு அம்மாள் பெயரில் விருது’ : குடும்ப அரசியலை நிரூபிப்பதாக சாடல்!

 

‘தயாளு அம்மாள் பெயரில் விருது’ : குடும்ப அரசியலை நிரூபிப்பதாக சாடல்!

மனைவி தயாளும்மமாளும் உடல் நலக்குறைவால் நலிவுற்றிருந்தார். அதன் பிறகு அவரை பொதுநிகழ்ச்சிகளில் காண முடியவில்லை. 

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் ஆகிய மனைவிகள் உள்ளனர்.

ttn

மு.க.முத்து, மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய மகன்களும் செல்வி, கனிமொழி ஆகிய மகள்களும் உள்ளனர். கலைஞர் மறைவின் போது  அவரின் மனைவி தயாளும்மமாளும் உடல் நலக்குறைவால் நலிவுற்றிருந்தார். அதன் பிறகு அவரை பொதுநிகழ்ச்சிகளில் காண முடியவில்லை. 

ttn

இந்நிலையில் திமுக சார்பில் தயாளு அம்மையார் சுய மரியாதை பெண்கள் விருது ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதை கண்ட சிலர்   இவரின் பெயரில் விருது வழங்குவதை விட,  கட்சியில் உண்மையாக உழைத்த பல பெண்கள் உள்ளனர்.  அவர்களுடைய பெயரில் விருது  வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். 

குடும்ப அரசியல் என்று சொல்லப்படும் திமுகவில் விருது கூட  அவர்களின் குடும்பத்துக்குள்ளாகவே வழங்கப்பட்டு விடுமோ என்று சிலர் சாடி வருகிறார்கள்.