தயாரிப்புக்கு முழுக்கு போடும் விஜய் ஆண்டனி?

 

தயாரிப்புக்கு முழுக்கு போடும் விஜய் ஆண்டனி?

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விஜய் ஆண்டனி, தொடர் தோல்வி படங்களால் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விஜய் ஆண்டனி, தொடர் தோல்வி படங்களால் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

இசையமைப்பாளராக வெற்றிபெற்ற விஜய் ஆண்டனி ‘நான்’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல படங்களை தயாரித்து, இசைமைத்து நடித்து வந்த விஜய் ஆண்டனி, சமீபத்தில் நடித்த ‘திமிருபுடிச்சவன்’ திரைப்படம் இன்று ரிலீசானது.

இப்படத்தின் மீது விஜய் ஆண்டனி அதிக எதிர்ப்பார்ப்பு வைத்திருந்த நிலையில், இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியை பெறவில்லை என கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தோல்விப்படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி, கடன் தொல்லை, திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என பல பிரச்னைகளால் இனி சிறிது காலம் திரைப்படங்கள் தயாரிக்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளாதாக தெரிகிறது.

விஜய் ஆண்டனி தயாரிப்பில் கடைசியாக உருவாகும் திரைப்படம் ‘கொலைகாரன்’ எனவும், அதைத் தொடர்ந்து அருண் விஜயுடன் சேர்ந்து நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படம் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.