தம்பி லாரன்ஸ் நீ எந்த நாட்டை பத்தி பேசுற ராஜா… சீமான் பதிலடி!

 

தம்பி லாரன்ஸ் நீ எந்த நாட்டை பத்தி பேசுற ராஜா… சீமான் பதிலடி!

இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டியதன் அவசியம் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று  நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது.  விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இயக்குநருமான  ராகவா லாரன்ஸ்,  ‘இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டியதன் அவசியம் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள். சூப்பர் ஸ்டார் என்றே பெயரே ஒரு பப்ளிசிட்டி தான். இதுக்கு மேல அவருக்கு எதுக்கு பப்ளிசிட்டி. தான் அரசியலுக்கு வருவேன் என்று என் தலைவன் சொன்ன போது  கூட ஒவ்வொரு  அரசியல் கட்சி தலைவரிடம் என்ன பிடிக்கும் என்பதை சுட்டிக்காட்டி புகழ்ந்திருந்தார்.

ttn

குறிப்பாக  மு.க.ஸ்டாலின் தொடங்கி எனக்கு அவர் பெயர் சொல்ல பிடிக்கல(சீமான்) அவர் வரை அனைவரையும் புகழ்ந்துள்ளார். நான் இந்த மேடையில் இப்படி பேசினதுக்குத் தலைவர் என்கிட்ட பேசலனாலும் பரவாயில்ல. ஆனா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். சீமான் பேச்சு  நாட்டுக்கு நல்லதல்ல’ என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.  

ttn

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ராகவா லாரன்ஸ் விமர்சனம் குறித்து பதிலளித்துள்ளார். அதில், தம்பி  லாரன்ஸ் சொல்வது  எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை. நான் என் நாட்டிற்காக என் மக்களுக்காகப் பேசி வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.