தம்பியைக் கொன்றவனை அடுத்த அரைமணி நேரத்தில் குத்திக் கொன்ற அண்ணன்! டாஸ்மாக்கில் அடுத்தடுத்த நடந்த இரட்டைக் கொலை!

 

தம்பியைக் கொன்றவனை அடுத்த அரைமணி நேரத்தில் குத்திக் கொன்ற அண்ணன்! டாஸ்மாக்கில் அடுத்தடுத்த நடந்த இரட்டைக் கொலை!

தமிழகத்தில் தெருவிற்கு தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளினால் தினம் தினம் ஏதாவதொரு பகுதியில் கொலை, கொள்ளை, மானபங்கப்படுத்துதல், போலீசாரிடம் வாக்குவாதம் என்று குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தமிழகத்தில் நிறைய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்து வந்தாலும், சிசிடிவி கேமிராக்கள், குற்றங்கள் நடைப்பெற்ற பின்னர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு தான் உதவியாய் இருக்கிறதே தவிர, குற்றச்செயல்கள் நடைப்பெறாமல் இருக்கச் செய்வதற்கான முயற்சிகளை அரசு எடுப்பதேயில்லை என்கிற கருத்து மக்களிடையே பரவலாக இருக்கிறது.

தமிழகத்தில் தெருவிற்கு தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளினால் தினம் தினம் ஏதாவதொரு பகுதியில் கொலை, கொள்ளை, மானபங்கப்படுத்துதல், போலீசாரிடம் வாக்குவாதம் என்று குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தமிழகத்தில் நிறைய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்து வந்தாலும், சிசிடிவி கேமிராக்கள், குற்றங்கள் நடைப்பெற்ற பின்னர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு தான் உதவியாய் இருக்கிறதே தவிர, குற்றச்செயல்கள் நடைப்பெறாமல் இருக்கச் செய்வதற்கான முயற்சிகளை அரசு எடுப்பதேயில்லை என்கிற கருத்து மக்களிடையே பரவலாக இருக்கிறது.

tasmac

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் நடைப்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவருடைய  மகன் ஆனந்த் (37). டூ வீலர் மென்கானிக்கான இவர் திருமணத்திற்கு பின் பெரம்பலூர், நல்லறிக்கை கிராமத்தில் தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சண்முகம் (34). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இருவேறு சமூகத்தைச் சேர்ந்த ஆனந்த், சண்முகத்துக்கு இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. நேற்றிரவு நல்லறிக்கை டாஸ்மாக் கடையில் சண்முகம், ஆனந்த் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய ஆனந்த், சண்முகத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த ஆனந்த்,  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சண்முகத்தை குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகம் உயிரிழந்தார்.

murder

இதனிடையே, இத்தகவலை அறிந்த சண்முகத்தின் மூத்த சகோதரர் முருகானந்தம் ஆத்திரமடைந்து ஆனந்தைத் தேடி டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த ஆனந்தை பீர் பாட்டிலால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே ஆனந்த் உயிரிழந்தார். டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் அடுத்தடுத்து இருவருமே பலியானார்கள். தற்போது கொலை செய்த முருகானந்தம் உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.