தம்பியுடன் கள்ளக்காதல்…2வது முறையாக 4 குழந்தைகளை விட்டுவிட்டு கம்பிநீட்டிய பெண்: அவமானத்தால் கணவர் எடுத்த விபரீத முடிவு!

 

தம்பியுடன் கள்ளக்காதல்…2வது முறையாக 4 குழந்தைகளை விட்டுவிட்டு கம்பிநீட்டிய பெண்: அவமானத்தால் கணவர் எடுத்த விபரீத முடிவு!

இதுகுறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த கருணாகரன் மதுரவாயல் போலீசில் புகார் கொடுக்க, அவர்கள் இருவரும் மதுரையில் தங்கியிருப்பதை போலீஸ் கண்டுபிடித்தது.

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவருக்கு  25 வயதான வைத்தீஸ்வரி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும், 6 மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.   கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கருணாகரன் திருமணம் செய்துகொள்ளும் போது வைத்தீஸ்வரிக்கு 15 வயதாம். இதையடுத்து  சென்னை மதுரவாயல் ஏரிக்கரையில் வாடகை வீட்டில் குடியேறி இந்த தம்பதி வாழ்ந்து வந்துள்ளார்கள். 

ttn

இதையடுத்து  கருணாகரனின் ஊரை சேர்ந்த 24 வயதான ஏழுமலை, சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுநராக பணிக்கு சேர்ந்துள்ளார். வைத்தீஸ்வரிக்கு தம்பி முறையான ஏழுமலை சென்னையில் தங்க வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.  இதனால் பரிதாபப்பட்ட கருணாகரன் அவரை வீட்டில் தங்க அனுமதித்துள்ளார். ஆனால்  ஏழுமலை வைத்தீஸ்வரியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார். பின்னர் இருவரும் நெருங்கிப்பழக, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கடந்த  ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி   வைத்தீஸ்வரியை மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த கருணாகரன் மதுரவாயல் போலீசில் புகார் கொடுக்க, அவர்கள் இருவரும் மதுரையில் தங்கியிருப்பதை போலீஸ் கண்டுபிடித்தது.

tn

இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார், மதுரை சென்று இருவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் வைத்தீஸ்வரியை கருணாகரனுடன் அனுப்பி வைத்தனர். இதனால் தனது ஊருக்கு சென்ற கருணாகரன் அங்கு மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். 

ttn

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி சோ குப்பம் கிராமத்தில் தைப்பூச திருவிழா நடந்துள்ளது. இதற்காக ஊருக்கு வந்த ஏழுமலை மீண்டும் வைத்தீஸ்வரியை அழைத்து கொண்டு ஓடியுள்ளார். இதுகுறித்து கருணாகரன் மீண்டும் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இருப்பினும் மனைவியின் செயலால் மனமுடைந்த அவர்,  பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் .  இதை கண்ட கருணாகரனின் தாய் மீதமுள்ள பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள நினைத்துள்ளார். இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர்கள் மேல்சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆபத்தான முறையில் உள்ளனர். 

4 குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறேன், என் மனைவியை என்னுடன் சேர்த்து  வையுங்கள் என்று கருணாகரன் போலீசிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.