தம்பியின் மரணத்திற்கு பழிதீர்த்த அண்ணன்: ரத்தத்தை சமாதியில் தெளித்த கொடூரம்!

 

தம்பியின் மரணத்திற்கு பழிதீர்த்த அண்ணன்: ரத்தத்தை சமாதியில் தெளித்த கொடூரம்!

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சிவன் மூர்த்தி கொடிமங்கலத்தில் உள்ள அவரது மாமா வீட்டில் தங்கியிருந்ததாகக்  கூறப்படுகிறது.  

சிவகங்கை: அண்ணன்  ஒருவர் தனது தம்பியை கொலை செய்தவரைக் கொன்று, அவரது ரத்தத்தைத்  தம்பியின் சமாதியில் தெளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த மார்ச் 18ஆம் தேதி குடிபோதையிலிருந்த போது  நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் மாத்தூர் அருகே வேலங்குளம் கண்மாயில் வெட்டிப் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த  சிவன் மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சிவன் மூர்த்தி கொடிமங்கலத்தில் உள்ள அவரது மாமா வீட்டில் தங்கியிருந்ததாகக்  கூறப்படுகிறது.  

murder

இந்நிலையில்  சிவமூர்த்தி அவரது மாமா வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சடலமாகக் கிடந்தார்.இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரசாந்த் கொலைக்குப் பழிதீர்க்கும் வகையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

murder

அப்போது மாத்தூரை சேர்ந்த இளைஞர்கள் இணைந்துள்ள வாட்ஸ் அப் குரூப்பில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில்  பிரசாந்தின் அண்ணன் ஊர்க்காவலன் , ‘தம்பியின் கொலைக்குப் பழிதீர்த்துவிட்டேன், அவனது ரத்தத்தை எடுத்துக்கொண்டு சென்று தம்பியின் சமாதியில் தெளித்து விட்டேன் ‘ என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.