தம்பியின் தற்கொலைக்கு இதுவே காரணம்… ஆனந்தராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

 

தம்பியின் தற்கொலைக்கு இதுவே காரணம்… ஆனந்தராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நடிகர் ஆனந்த ராஜின் தம்பி கனகசபை  புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரில் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஏலசீட்டு நடத்திவந்த நிலையில் அதில் ஏற்பட்ட சில குளறுபடியால் தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

நடிகர் ஆனந்த ராஜின் தம்பி கனகசபை  புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரில் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஏலசீட்டு நடத்திவந்த நிலையில் அதில் ஏற்பட்ட சில குளறுபடியால் தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு  தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கனகசபை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் நடிகர் நடிகர் ஆனந்த ராஜ் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனந்த ராஜ் தம்பி

ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டமே அவரது தற்கொலைக்கு காரணமாக சொல்லப்பட்டுவந்த நிலையில் இதனை நடிகர் ஆனந்தராஜ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  “என் தம்பி ஏலச்சீட்டு நஷ்டத்தினால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் சமீபத்தில் ஒரு வீடு வாங்கியிருந்தார், அதுசம்பந்தமாக சிலர் அவரை மிரட்டி வந்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான் அவர் இறந்து விட்டார். இந்த தகவலை அவர் ஒரு கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். தனது தம்பியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும்” எனக்கூறினார்.