தம்பதியர்களுக்கு மனநிறைவையும், வாழ்வில் பேரானந்தமும் தரும் மூன்றாம் பிறை

 

தம்பதியர்களுக்கு மனநிறைவையும், வாழ்வில் பேரானந்தமும் தரும் மூன்றாம் பிறை

மூன்றாம் பிறை என்றால் என்னவென்று தெரியுமா?  ‘கண்ணே கலைமானே’ என்று ஸ்ரீதேவியை மடியில் படுக்க வைத்துக் கொண்டு கமல் பாடிக் கொண்டிருக்கும் மூன்றாம் பிறையைச் சொல்லக்கூடாது… ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது நாள் தான் மூன்றாம் பிறை நாளாகும். அந்த மூன்றாம் நாளில் வருகிற சந்திரன் வளர்பிறை சந்திரன்.

மூன்றாம் பிறை என்றால் என்னவென்று தெரியுமா?  ‘கண்ணே கலைமானே’ என்று ஸ்ரீதேவியை மடியில் படுக்க வைத்துக் கொண்டு கமல் பாடிக் கொண்டிருக்கும் மூன்றாம் பிறையைச் சொல்லக்கூடாது… ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது நாள் தான் மூன்றாம் பிறை நாளாகும். அந்த மூன்றாம் நாளில் வருகிற சந்திரன் வளர்பிறை சந்திரன். அன்று மாலை தெரிகிற சந்திரனை தரிசனம் செய்தால், நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் எல்லாம் கரைய ஆரம்பிக்கும் என்பார்கள்.  நீங்கள் சமீபமாக எப்போது ஈ.எம்.ஐ., கிரெடிட்  கார்டு பில், வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ் என்று எந்தவிதமான யோசனைகளும் இல்லாமல் நிலாவை ரசித்தீர்கள்..

moon

இதற்கான பதிலைச் சொல்ல நீங்கள் ஒரு நிமிடத்திற்கும் மேலான நேரத்தை எடுத்துக் கொண்டால், இனியொரு விதி செய்வோம். நிலவை, அதன் குளிர்ச்சியையும் அனுபவிப்பதற்கென்றே மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுங்கள். அந்த நாள் மூன்றாம் பிறை நாளாக இருக்கட்டும். நம் சந்ததியினருக்கும் நிலவை ரசிக்கிற மனநிலையையும், அதன் குளிர்ச்சியையும் அறிமுகப்படுத்துங்கள்.  இப்படி பெரியவர்கள் நமக்கு அறிமுகப்படுத்திய பல நல்ல விஷயங்களை நாம் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லாமல் சுயநலத்தோடு பணம்…. பணம்… என்றே ஓடிக் கொண்டிருக்கிறோம். 

couples

அமாவாசை அன்று மட்டுமில்லை… அமாவாசைக்கு அடுத்த நாளும் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் வானத்தில் தோன்றும் நிலவு கூடுதல் அழகுடனும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையன்று மாலை 6.30 மணியிலிருந்தே தெரிய ஆரம்பித்து விடும்.  மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்கிறார்கள்.  மூன்றாம் பிறையைப் பார்த்தால் தம்பதியர்களுக்குள் ஒற்றுமையும், மனநிறைவும், வாழ்வில் பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். சதா சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் தம்பதியர்களுக்குள் ஏற்படுகின்ற மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே விலகிப் போய்விடும்.  சந்திரனை தரிசிக்கும் பொழுது, கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது. மூன்றாம் பிறையைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். கண் பார்வை தெளிவாகும். மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. அன்று ஒரு நாள் மட்டுமாவது குடும்பத்தில் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு நிலவொளியில் கொஞ்சம் நேரம் அமர்ந்து மனம்விட்டு நிலவை ரசித்தப்படி நேரத்தை செலவிடுங்கள். ஆன்மிகத்தோடு உங்கள் ஆரோக்கியமும் வளரட்டும்.