தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க இவங்களதான் நம்பியிருக்கேன் நடிகர் விஷால்!

 

தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க இவங்களதான் நம்பியிருக்கேன் நடிகர் விஷால்!

நடிகர் விஷால் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க தமிழக அரசை தான் நம்புகிறேன் என்று பேட்டியில்  கூறியுள்ளார்

சென்னை: நடிகர் விஷால் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க தமிழக அரசை தான் நம்புகிறேன் என்று பேட்டியில்  கூறியுள்ளார்.

இசைஞானி இளையராஜாவை கௌரவப்படுத்தும்  வதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த பிப்.2,3 தேதிகளில்  நடத்த பட்ட ‘இளையராஜா 75’ விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை வெற்றிவிழாவாக மாற்றிய அனைவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகருமான விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில்,தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் விஷால். 

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால், இளையராஜா விழாவுக்கு சிறப்பான பாதுகாப்பு கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி சொல்லவே இங்கு வந்தேன். தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க ஒரே நாள் போதும், தமிழக அரசை தான் கடவுளாக நம்பியிருக்கிறோம் என்று பல்வேறு கோரிக்கைகளை நான் இன்று முதல்வரிடம் கூறியுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.