தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்தவர் மோடி: அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு..

 

தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்தவர் மோடி: அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு..

சுபஸ்ரீ மரணத்தில் அதிமுக பிரமுகர் கைதான வழக்கைக் குறித்துப் பேசிய அவர், அதிமுக ஆட்சி யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்கும் என்றும் கூறியுள்ளார். 

இந்தியாவின் வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு உதாரணமாக விளங்குகிறது. வளரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம். இதை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் உள்ள புறநானூறு பாடல் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஐ.நா சபையில் கூறியுள்ளார். 

Minister Sellur raju

இதற்காகப் பல தலைவர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு’, தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்தவர் மோடி, அதனால் தான் அவர் ஐ.நா சபையில் தமிழை முன் உதாரணமாகக் காட்டியுள்ளார். இதற்குத் தமிழக மக்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் கூறியுள்ளார். 

மேலும், சுபஸ்ரீ மரணத்தில் அதிமுக பிரமுகர் கைதான வழக்கைக் குறித்துப் பேசிய அவர், அதிமுக ஆட்சி யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.