தமிழ் மகளாக சென்று தெலங்கானாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் – தமிழிசை!

 

தமிழ் மகளாக சென்று தெலங்கானாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் – தமிழிசை!

தமிழிசை இன்று காலை 11 மணிக்கு ஆளுநராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ் மகளாக சென்று தெலங்கானாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார். 

தமிழிசை இன்று காலை 11 மணிக்கு ஆளுநராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ் மகளாக சென்று தெலங்கானாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார். 

tamilisai

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசியல் தலைவர்கள் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். தெலுங்கானாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முயற்சிகள் எடுப்பேன். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ஆண்டவனுக்கும், ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து உங்களுடைய சகோதரியாக, தமிழ் மகளாக சென்று வருகிறேன். எனது கடமை அங்கிருந்தாலும் எனது எண்ணம் இங்கு தான் இருக்கும்” என்று கூறினார்.