தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுக்கும் இலங்கை சூப்பர் ஸ்டார்!

 

தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரி கொடுக்கும் இலங்கை சூப்பர் ஸ்டார்!

‘அந்த நிமிடம்’ எனும் படத்தின் மூலம் இலங்கையை சேர்ந்த நடிகர், வில்லனாக தமிழில்  அறிமுகமாகிறார்.

சென்னை: ‘அந்த நிமிடம்’ எனும் படத்தின் மூலம் இலங்கையை சேர்ந்த நடிகர் ஒருவர் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.

இலங்கை சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் வீர்சிங். இவர் கடந்த 15 வருடங்களில் சுமார் 45 படங்களில் நடித்துள்ளர். அதைத்தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். ‘அந்த நிமிடம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை குழந்தை இயேசு என்பவர் இயக்கியுள்ளார். 

இந்த நிலையில் படத்தை பற்றி நடிகர் வீர்சிங் கூறுகையில், ‘மும்பையில் நடிப்பு பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஸ்ரீலங்காவில் கடந்த 15 வருடங்களாக நடித்து வருகிறேன். அங்கே கதாநாயகனாக நடித்தாலும் தமிழில் ‘அந்த நிமிடம்’ படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமாகிறேன். இந்தப் படத்தின் கதைக்கருவைக் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக என் மனதில் போட்டு உருவாக்கி வந்தேன். 

actor

பின்னர் எனது நண்பரான இயக்குநர் குழந்தை இயேசுவிடம் இதுபற்றி சொன்னேன். பிறகு இதைப் படமாக்க முடிவு செய்தோம். நான் ஓர் நாள் ராணுவ அதிகாரியாக வேலை பார்த்து வந்தவன். அதனால் ஒவ்வொரு பெண்ணையும் தாயாக மதிக்க வேண்டும் என்று நினைப்பேன். அவர்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல. இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. அதை மையப்படுத்தித் தான் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன். படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்கா, தமிழ்நாடு என இரண்டு இடங்களில் நடைபெற்றுள்ளன. முன் ஜென்மத்தில் எனக்கு இந்தியாவுடன் ஏதோ தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். அதனால்தான் என்னையும் அறியாமல் இந்தியாவை நேசிப்பதுடன் தென்னிந்திய மொழிப் படங்களில், குறிப்பாக தமிழில் நடிப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன்.

veer singh

நடிகர் ரகுமான் எனது மிக நெருங்கிய நீண்டகால நண்பர். நான் தமிழ் சினிமாவில் நடிப்பதை அறிந்து முதல் ஆளாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ‘அந்த நிமிடம்’ வெளியான பின் எனக்குத் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகருக்கான இடம் கிடைக்கும்’ என்று நம்பிக்கையாகத் தெரிவித்துள்ளார்.