தமிழ்படம் சிவா பாணியில் ஓ.பி.எஸ்.-சை கலாய்த்த மு.க.ஸ்டாலின்

 

தமிழ்படம் சிவா பாணியில் ஓ.பி.எஸ்.-சை கலாய்த்த மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பொள்ளாச்சி: தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைப் போன்று மு.க.ஸ்டாலின் தியானம் செய்து காட்டிய சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக-வும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. தங்களது கட்சியை சேர்ந்த வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

mk stalin

அந்த வகையில் மாநிலம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், கொடநாடு விவகாரம், ஜெயலலிதா மரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து அதிமுக மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். 

mkstalin

அதன்படி, பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதன்முதலில் கூறியது ஓபிஎஸ் தான். ஜெயலலிதா சிறைக்குச் செல்லும் போதெல்லாம் தான் முதல்வராகக் கூடிய அதிர்ஷ்டம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைக்கும். அதேபோல், ஜெயலலிதா காலமான பின்னரும் அவர் தான் முதல்வரானார். சட்டப்பேரவைக்கு ஓ.பி.எஸ் வந்த போது அவருடைய முதல்வர் பொறுப்புக்கு மரியாதை கொடுத்து வணக்கம் செலுத்தினோம். அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்லி சிரித்தார்.

stalin, ops meditation

ஆனால், எப்படி எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து சிரிக்கலாம் என கோபப்பட்ட சசிகலா, அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டார். பின்னர் முதல்வராகும் கனவில் இருந்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தார் சசிகலா. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஓபிஎஸ், ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்து, ஆவியுடன் பேசினார் என கூறிய போது, ஸ்டாலினும் கண்களை மூடி ஓபிஎஸ் போன்று தியானம் செய்து நடித்துக் காட்டினார்.

siva

நடிகர் மிர்ச்சி சிவா நடித்த அரசியல் நையாண்டி படமான தமிழ்படம் இரண்டாம் பாகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் செய்ததை போன்று தியானம் செய்து கலாய்த்திருப்பார். அதேபோன்று ஸ்டாலினும் ஓபிஎஸ்-சை கலாய்த்தது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மேலும், திமுக அட்சி பொறுப்பேற்றதும் ஜெயலலிதா மரணத்திற்குக் காரணமானவர்கள் சிறை செல்வார்கள் எனவும் ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

இதையும் வாசிங்க

வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா-நடக்காதா? ஆடு,புலி ஆட்டத்தைத் தொடங்கிய அ.தி.மு.க!